Posts

Showing posts from March, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா - Epi 12

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 12 துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப் போன பார்கவி பதட்டப்பட, “யாரும் இங்கே நிக்காதீங்க! எல்லாரும் உடனே கிளம்புங்க” என்றார் அங்கு நின்ற வனத்துறை அதிகாரி ஒருவர். பார்கவியின் நண்பர்கள் அனைவரும் வேகமாகச் சென்று வண்டியில் ஏற, அவளோ பதட்டம் மாறாமல் அப்படியே நின்றிருந்தாள். “அக்கா… வந்து வண்டியில ஏறு” என்று ஷாரதா அவளது தோள் தொட்டு கூறவும், “எனக்கு பயமா இருக்கு ஷாரதா. ஒருவேளை அவருக்கு எதுவும் பிரச்சனை ஆயிருக்குமோன்னு நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றாள். “ஐயோ… அதெல்லாம் எதுவும் இருக்காதுக்கா. நீ எதுக்காக வீணா மனசை போட்டு குழப்பிக்குற?” என்று அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் ஷாரதா. “ஏம்மா… சீக்கிரமா கிளம்புங்கன்னு எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன். நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தும்மா. சொன்னா புரிஞ்சுகோங்க” என்று அந்த வனத்துறை அதிகாரி பொறுமை இழந்து பேசவும், இனியன் அவர்களிடம் சென்றான். “என்னாச்சு? ஏன் இன்னும் வண்டியில ஏறாம இருக்கீங்க?’ என்று அவன் கேட்க, “மாமாவை நினைச்சு அக்கா பயந்துட்டு இருக்கா இனியன்” என்றாள் ஷாரதா. “இனிய

Coming soon

Image
 புதிய கதை விரைவில்... கதையின் தலைப்பு: காற்றெல்லாம் காதல் ஆனதே!  A feel good love story in my style! Coming soon...

Amazon links

வணக்கம்! எனது முடிவுற்ற கதைகளுக்கான அமேசான் கிண்டில் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கிண்டில் subscription உள்ளவர்கள் இந்த லிங்கை உபயோகித்து எனது நாவல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி! ஒரு வெயில்! ஒரு நிலவு! மேகத்தில் கரைந்த வெண்பனி! என் ஜீவன் நீயே! அடங்கா காதல் திமிரே! நெய்தல் நிலவே! முழுதாய் தொலைந்தேன் கனவுரு காதலன்! அமெரிக்காவில் தைப்பொங்கல்(சிறுகதை)